
உதாரணம்-1
மனிதர்களாகிய நாம் நல்ல உணவுகளையே உண்கிறோம், நல்ல ஆரோக்கிய நிலையிலேயே இருக்க விரும்பிகிறோம் ஆனால் நாம் கொஞ்சமும் விரும்பாத துர்நாற்றமுள்ள கழிவுகளையும் நமது உடம்பு நம்முடைய அனுமதியின்றி தானாகவே உற்பத்தி செய்கின்றது.
இவ்வித கழிவுகளை உற்பத்தி செய்தது யார் என்று கேட்டால்? பதில் என்ன?
நாம் தான்
ஆனால் அவற்றை வேண்டும் என்றா உற்பத்தி செய்தோம்?
இல்லவே இல்லை ஒரு பொருளில் உள்ள நலமானதை எடுத்தபோது நலமாற்றது தானாகவே கழிவாக உருவாகிவிட்டது.
அவற்றை நாம் விரும்புகிறோமா?
இல்லை அவற்றை வெறுக்கிறோம், அவற்றைவிட்டு விலகி இருக்க விரும்புகிறோம்.
உதாரணம்-2
ஒரு மிகப்பெரிய உரதொழிற்சாலையை எடுத்து கொள்வோம். அத்தொழில்சாலை
தாவரங்களுக்கு தேவையான உரத்தை தயாரிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. அனால் அது செயல்படும்போது சில அசுத்த வாயுக்கள் தானாக உருவாகிறது அவ்வாயுக்களில் சில, மிக உயர்ந்த புகைபோக்கி மூலம் வெளியேற்றப்படுகின்றன. சில வாயுக்கள் கொடியநச்சு கலந்தவையாக இருப்பதால் ஒரு பெரிய உலோக கோளத்துக்குள் அடைத்து வைக்கப்படுகின்றன. அவ்வாயுக்கள் கடந்து செல்லும் இடங்கள் மிகுந்த
எச்சரிக்கையுடன் கையாளப்படுகின்றன.
இங்கு இந்த விஷ வாயுக்களை உருவாக்கியது யார்?
மனிதன்
அதை அவன் விரும்பியா தயாரித்தான்?
இல்லை அவைகள் தானாக உருவாகிவிட்டன
மனிதன் அதை விரும்புகிறானா?
அவற்றை வெறுக்கிறோம் அவற்றின் அருகில் செல்லலகூட விரும்புவதில்லை அவ்வாறு செல்பவர்களையும் எச்சரிக்கிறோம்.
இந்த நிலைதான் இங்கு இறைவனின் நிலையும்!
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார் அது ஒழுங்கின்மயாகவும் வெறுமையாகவும் இருந்தது!
அவற்றை சீர் செய்து, மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாக மாற்றவேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கத்தோடு தேவன் செயல்பட்டார்.
எனவே வெளிச்சம் தேவை என்பதை அறிந்து வெளிச்சத்தை உண்டாக்கினார் அவ்வாறு வெளிச்சம் இல்லாத இடம் இருள் என்று பெயர்பெற்றது. (இரண்டையும் உண்டாக்கியவர் தேவனே)
பரிசுத்தமான அனைத்தையும் ஓன்று சேர்த்து ஒரு நன்மையான படைப்பை உருவாகிய போது பரிசுத்தம் இல்லாததும் தீமையும் தானாக பிரிந்தது.(இரண்டையும் உருவாக்கியவர் தேவனே)
தேவன் மனிதர்களுக்கு சமாதானத்தையும் சந்தோசத்தையும் அருளியபோது சமாதானம் இல்லாத இடம் தீமையால் நிறைந்தது. (இரண்டுக்கும் காரணம் தேவனே.)
இங்கு நன்மை தீமை இரண்டையும் உருவாக்கியவர் தேவன்தான். அவர் வேண்டுமென்று விரும்பி தீமையை உருவாக்கவில்லை. நன்மையை ஓன்று சேர்த்தபோது, தீமை தானாக பிரிந்தது, தீமையின் விபரீதத்தை முழுமையாக அறிந்த தேவன் தீமையை வெறுக்கவும் அதை விட்டு விலகி இருக்கவும் வேண்டும் என்று மனிதர்களாகிய நம்மை திரும்ப திரும்ப எச்சரிக்கிறார்
அவரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்த பிரதான தூதன் பாவத்தில் (தீமையில்) விழுந்தான். அவனை தொடர்ந்து அவனால் மனித குலமும் பாவத்தில் விழுந்தது.
தேவன் மனுக்குலத்தை மீட்க தனது குமாரனை அனுப்பினார். அவர் தீமையை முற்றிலும் அழிக்க வரவில்லை தீமைக்குள் விழுந்த சாத்தானின் தலையை நசுக்கி மனுக்குலத்துக்கு கைகொடுக்கதான் வந்தார்.
எபிரெயர் 2:16 ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்
தீமையை நன்மையாலே வென்றார், கீழ்படியாமையால் வந்த தீமையை கீழ்படிதலால் வென்று, நமக்கு ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி சென்று
மத்தேயு 8:22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.
லூக்கா 9:59 வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்
யோவான் 12:26 ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன்
தீமை என்னும் சேற்று பள்ளத்திலிருந்து நம்மை தூக்கி எடுத்த இயேசு "என்னை பின்பற்றி வா" என்று அழைக்கிறார். நாம் எதை பற்றியும் யோசிக்காமல், அவரை பின்பற்றி சென்றாலே தீமையை கடக்கமுடியும்.
மற்றபடி தீமை என்பது தேவனால்தான் உருவானது எனவே அதனுடன் சமாதனம் செய்து கொள்ளலாம், தேவன்தான் எல்லா தீமைக்கும் காரணம், எனவே அவர் எல்லோரையும் நிச்சயம் மீட்டுவிடுவார் என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டு அவரது எச்சரிப்பை அலட்சியம் செய்தால், மீள முடியாத துன்பத்தில் வீழ்வது நிச்சயம்.
No comments:
Post a Comment