
தேவனால் எதையும் எப்பொழுதும் செய்யமுடியும்! எந்த வசனமோ அல்லது யாருடைய வார்த்தையோ அல்லது எந்த ஒன்றுமோ அவரை/அவரது செயல்களை கட்டுபடுத்த முடியாது.
வேதத்தை ஆராய்ந்து பார்த்தால் தேவன் தான்சொன்ன பல்வேறு வசனங்களை பல சூழ்நிலைகளை தனது இஸ்டப்படி மாற்றி அனேக காரியங்களை சிலருக்கு நன்மையும் சிலருக்கு மாற்றியும் செய்திருப்பதை அறியமுடியும்.
உதாரணம் 1:
உபாகமம் 23:3 அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.
என்று திட்டவட்டமாக கர்த்தர் தெரிவித்திருந்தும், மோவாபிய இனத்தின் குனசாலி ஸ்திரியாகிய ரூத்தின் கீழ்படிதலிநிமித்தம் தனது கோத்திரத்துக்குள் அனுமதித்ததோடு அவள் பெயர் இயேசுவின் வம்ச அட்டவணையிலும் வரும்படி அருள் செய்திருக்கிறார்
ரூத்
11. ; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.
மத்தேயு 1:5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
உதாரணம் 2
மோசேயின் சகோதரனாகிய ஆரோன் கர்த்தருக்கு ஆசாரியஊழியம் செய்யும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, எடுக்கப்பட்டார்கள். நித்ய ஆசாரிய பட்டம் அவர்களிடமே இருந்தது
யாத்திராகமம் 29:8 பின்பு அவன் குமாரரைச் சேரப்பண்ணி, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்துவாயாக.
ஆகினும் சாமுவேலின் நாட்களில் ஏலியின் குமாரர்கள் மோசமாக நடந்துகொண்ட போது தேவன் தனது வார்த்தைகளை மாற்றி
I சாமுவேல் 2:30 ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதுபோல் தேவன் தனது வார்த்தைகளை மாற்றி செயல்கள் செய்த பல சம்பவங்கள் வேதத்தில் உண்டு. அவர் தேவன்! அவர் விரும்பியதை செய்ய அவருக்கு வல்லமை உண்டு. அவரிடம் யாரும் ஏனென்று கேட்க முடியாது.
யாத்திராகமம் 33:19 எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன்
போன்ற வசனங்களின் அடிப்படையில் எந்தவித முன் அறிவித்தலுமின்றி சிலுவையில் தொங்கிய கள்வனின் கடைசி நேர கீழ்படிதல் மற்றும் மன நிலைகளின் அடிப்படையில் தேவன் ஒரு உன்னதமான இடத்தை அவனுக்கு
கொடுத்தார் என்று எடுத்து கொள்ளலாம்.
மத்தேயு 20:15 என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா?
அவருடையதை அவரது இஸ்டபடி கொடுக்க அவருக்கு அதிகாரம் உண்டு. ஆகினும் அது எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியல்ல நமக்கு சொல்லப்பட்டவை களுக்கு நாம் நிச்சயம் கீழ்படிந்தே ஆகவேண்டும் என்றே நான் கருதுகிறேன்.
No comments:
Post a Comment