
பணம் என்னும் பயங்கர ஆயுதத்திற்கு அடுத்தால் போல் அனேக மக்களை அடிபணிய வைப்பதற்கு சாத்தான் பயன்படுத்தும் அடுத்த ஆயுதம் "பாலியல் இச்சை" என்றால் மிகையாகாது. எனவே எதிர் பாலினர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்ற தெளிவை பெறுவது இங்கு மிகுந்த அவசியமாகிறது.
ஆதியிலே சர்ப்பமானது ஏவாளை பயன்படுத்திதான் ஆதாமை கவிழ்த்தது. அதே டெக்னிக்கில் இன்றும்
ஆண்களை கவிழ்ப்பதற்கு சாத்தான் அதிகமாக பயன் படுத்துவது "பெண்கள்" தான்.
எதிர் பாலினர் மேலுள்ள இச்சை என்பது மனிதனுக்கு இயல்பாகவே வரக்கூடியது. இவ்விஷயத்தில் பாவத்தில் விழாதபடி பார்த்து நடக்க வேத வசனங்களின் அடிப்படையில்
தகுந்த யோசனைகள்.நீதிமொழிகள் 6:29 பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.
என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப பாலியல் இச்சையில் மாட்டிகொண்டு தவித்தவர்களில் முக்கியமானவன் தாவீது. தேவனை நான்கு அறிந்த தேவனால்
"என் இருதயத்துக்கு ஏற்றவன்" என்று சொல்லப்பட்ட அவனே பத்செபாளிடம் பாவத்தில் விழுந்து படாதபாடு பட்டான்.
II சாமுவேல் 12:10 இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்
அடுத்து
நீதிமொழிகள் 6:26 விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்
என்ற வார்த்தைக்கு ஏற்ப தேவனால் அபூர்வமான நசரேய அபிஷேகத்தை பெற்ற அடுத்த நபரான சிம்சோன் பாலியல் பாவத்தில் சிக்கி வேசியின் மடியில் விழுந்து கண்கள் பிடுங்கப்பட்டு கடைசியில் மாண்டான்
நியாயாதிபதிகள் 16:21 பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.
இன்னும் தன் தங்கையாகிய தாமாரை கற்பழித்து அழிந்துபோன அம்னோன், மீதியானிய ஸ்திரியாகிய கஸ்பியோடு சயனித்து பினெகாசின் கையால் குத்துண்டு செத்த சிம்ரி, சவுலின் மறுமனை யாட்டியை தனதாக்கிகொண்ட அப்னேர், தாவீதின் மருமனயாடிகளோடு சயனித்து மாண்டுபோன அப்சலோம், தன் சகோதரனின் மனைவியை தான் வைத்துகொண்டிருந்து யோவானால் கடிந்து கோள்ளப்பட்ட ஏரோது என்று இவ்வரிசை நீண்டுகொண்டே போகிறது.
இவ்வாறு பலரது உயிரை காவுகொண்டுள்ள இந்த பாலியல் இச்சையை மேற்கொள்ளுவது எப்படி?உலகில் எல்லோருக்கும் எல்லாமே நல்லதாகவே நடப்பது இல்லை சோதனைகளும் துன்பங்களும் உலகில் வருவது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரூ நிலையிலும் சில விதி விலக்குகள் எப்போதும் இருக்கத்தான் செய்யம். அப்படிப் பட்டவர்களுக்கு ஆலோசனையாக இதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
1. மனைவியை இழந்தவர்கள்
2. தீராத நோயால் பாதிக்கப்பட்ட மனைவியை உடையவர்கள்
3. திருமணமாகாதவர்கள்
4 .விவாகரத்து செய்துகொண்டவர்கள்
5. தனது உடம்பை தன்னால் கண்ட்ரோல் பண்ண முடியாதவர்கள்
6. மனைவியை பிரிந்து வேறு இடத்தில் வாழ்பவர்கள்
இவர்கள் போன்ற விதி விலக்கானவர்களுக்கே இந்த ஆலோசனை: இப்படிப்பட்டவர்கள் தாங்கள் எந்த இடத்தில் அதிகம் தவறுதல் அல்லது மீறுதலை சந்திக்க நேரிடுகிறது என்பதை அறிந்து அந்த காரியத்திலிருந்து
விடுபட தொடர்ந்து ஜெபிப்பது அவசியம்.
வேறொருவனுக்கு நியமிக்கப்பட்டு நிச்சயதார்த்தம் நடந்து விட்டால் அதன்பின் அந்த பெண்ணை இன்னொருவன் திருமணம் செய்யகூடாது அவளும் பிறன் மனைவி என்ற கோட்டுக்குள் வந்துவிடுகிறாள்.
லேவியராகமம் 19:20 ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து,....... , அவளோடேஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலைசெய்யப்படாமல்
உபாகமம் 22:25 ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்தானேயாகில், அவளோடே சயனித்த மனிதன் மாத்திரம் சாகக்கடவன்.
மனைவியை வேசித்தன காரணமன்றி வேறு எக்காரணத்தை கொண்டும் தள்ளிவிட (விவாகரத்துக்கு) வேண்டாம்.
மத்தேயு 5:32 வேசித்தன முகாந்தரத்தினா லொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்
அவ்வாறு மனைவியை தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால் அவன் விபச்சாரம் செய்த பாவத்துக்குள்ளாவான்
லூக்கா 16:18 தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம் பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான்,
முடிந்த அளவு மனைவியை பிரிந்து வேரிடத்தில் போய் தங்கி சம்பாதிக்க விரும்பாதீர்கள். இது கட்டளையல்ல என்றாலும் ஒருவர் விழுவதற்கு வழி ஏற்ப்படுத்தியதுபோலாகும்.
I கொரிந்தியர் 7:5 உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்.
பல்வேறு காரியங்களினிமித்தம் ஒரு முடிவான நிலைக்கும் வர முடியாதவர்கள் அல்லது பிரச்சனையை தீர்க்க முடியாமல் தவிப்பவர்கள் மேலே சொல்லப்பட்டுள்ள காரியங்களை மீறிவாழ்ந்து தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வதைவிட இன்னொரு திருமணம் செய்துகொண்டு வாழலாம் அதில் எந்த தவறுமே இல்லை என்றே நான் கருதுகிறேன். அனால் இப்படிபட்டவர்கள் போதகராவோ அல்லது எதாவது ஆலோசனை சங்கதலைவர், கண்காணி பதவியிலோ இருக்ககூடாது
I தீமோத்தேயு 3:2 கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
நான் சொல்லியிருப்பதில் அனேக பழைய ஏற்பாட்டு கட்டளைகள் கலந்திருப்பதை அறியமுடியும். அதெல்லாம் தேவையில்லை என்று நீங்கள் கருதினால் கீழ்க்கண்ட ஒரே கட்டளை உங்களுக்கு போதும்
மத்தேயு 5:28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
எந்த ஸ்திரியையும் இச்சையோடு பார்க்காதீர்கள். இவ்வாறு உங்களால் இருக்க முடிந்தது என்றால் மேலே சொல்லப்பட்ட எதுவும்மே தேவயில்லை. ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்திலேயே இருக்கிறேன் அது கூடுதல் பரிசுத்த நிலையை போதிக்கிறது அதைமட்டும் நான் கைகொள்வேன் என்று சொல்லிக்கொண்டு எதையுமே செய்யாமல் விழுந்து போகவேண்டாம்.
சாத்தானின் முக்கிய நோக்கம் மனிதனை தேவனின் வார்த்தைகளை ஏதாவது ஒரு வழியில் மீறவைப்பதுதான். மற்றபடி, தேவனின் வார்த்தைகளுக்கு உட்பட்டு செய்யும் எதையும் அவன் கண்டுகொள்ளவே மாட்டான். அதில் பாவமும் இல்லை!